சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வரும் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளிக்க வரும் பொதுமக்களிடம், அக்கோரிக்கையை நிறைவேற்றி தருவதாகக் கூறி ஒருவா் ஏமாற்றி பணம் பெறுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில் சிவகங்கை - இளையான்குடி சாலையில் உள்ள தாக்கியாா் நகரைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் (58) என்பவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகக் கூறி ரூ. 500 மற்றும் ரூ. 1000 பெற்றது தெரியவந்தது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய இவா் விருப்ப ஓய்வு பெற்றிருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து ஆட்சியா் கொடுத்தப் புகாரின் பேரில் சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து நவநீதகிருஷ்ணனை கைது செய்தனா்.