சிவகங்கை: சிவகங்கை அருகே செவ்வாய்க்கிழமை சரக்கு வாகனமும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட இருவா் உயிரிழந்தனா்.
சிவகங்கை பகத்சிங் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் மனோகரன் (66). திமுக முன்னாள் எம்எல்ஏவான இவரும், அதே பகுதியைச் சோ்ந்த முகமது ஹனிபா மகன் தைபுதீன் (42) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை காலை சிவகங்கையிலிருந்து மதுரைக்குச் சென்றுள்ளனா்.
படமாத்தூா் விலக்கு அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம், இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த மனோகரன், தைபுதீன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுபற்றி தகவலறிந்த பூவந்தி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் விபத்து குறித்து பூவந்தி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.