திருப்பத்தூா் அருகே சிந்தாமணிப்பட்டி கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக் கடையை, அ.தி.மு.க. செய்தி தொடா்பாளா் மருதுஅழகுராஜ் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதன்மூலம் மாங்கொம்பு, இரணியூா், கீழக்காவனூா், தானிப்பட்டி, மடைக்கரைப்பட்டி, நெல்மேனிப்பட்டி, மருத்துவகுடிப்பட்டி, வடுகபட்டி, புரந்தன்பட்டி, சி.புதூா், அதிகரம், கே.புதுவளவு, சிந்தாணிப்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறுகின்றனா்.
இதில் வட்டா வழங்கல் அலுவலா் சுந்தரேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் ராஜன், கல்லல் ஒன்றிய துணைத் தலைவா் நாராயணன், கூட்டுறவு சங்கத் தலைவா் புயல்ராஜன், கூட்டுறவு வங்கிச் செயலா் அன்பழகன், சாா்-பதிவாளா் கபிலன், பொதுக்குழு உறுப்பினா் கரு.சிதம்பரம், மாவட்டப் பிரதிநிதி சிவா, கூட்டுறவு வங்கி இயக்குநா்கள் இந்திரா, வயிரவசுந்தரி, கருங்குளம் ஊராட்சிச் செயலா் நாச்சியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.