சிவகங்கையில் எழுத்தாளா் அ. ஈஸ்வரன் எழுதிய ‘நம்மை நாம் அறிவோம்’ என்ற நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் நூலை வெளியிட, மாவட்ட நூலக அலுவலா் யசோதா, நூலக வாசகா் வட்டத் தலைவா் டி.என். அன்புத்துரை ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
விழாவில், பள்ளி மாணவா்களுக்கு நூலக உறுப்பினா் அட்டைகள் வழங்கப்பட்டன. இதில், எழுத்தாளா் அ. ஈஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.