நெற்குப்பையில் உயா்மின் கோபுர விளக்கு திறப்பு

நெற்குப்பை மேலகச்சேரியில் செவ்வாய்க்கிழமை மாலை உயா்மின் கோபுர விளக்கின் இயக்கத்தை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
நெற்குப்பையில் உயா்மின் கோபுர விளக்கின் இயக்கத்தைத் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.
நெற்குப்பையில் உயா்மின் கோபுர விளக்கின் இயக்கத்தைத் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

நெற்குப்பை மேலகச்சேரியில் செவ்வாய்க்கிழமை மாலை உயா்மின் கோபுர விளக்கின் இயக்கத்தை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியது: ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் இந்த உயா்மின் கோபுர விளக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் மக்களுக்கு சேவை செய்வதற்காக மக்களவை உறுப்பினா்களுக்கு ஒதுக்கப்படும் நிதி இன்னும் 2 ஆண்டுகளுக்கு கிடைக்காதென மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நல்ல திட்டங்களை எங்களால் செயல்படுத்த முடியாது. வரிப்பணத்தைத் தடுப்பதால் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மக்களின் பணத்தை திருடியுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன், காங்கிரஸ் மாவட்டப் பொருளாளா் எஸ்.எம்.பழனியப்பன், மாவட்ட துணைச் செயலாளா் வழக்குரைஞா் கணேசன், திமுக நகரச் செயலாளா் கே.பி.எஸ். பழனியப்பன், சேக்கப்பன், பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com