சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சனிக்கிழமை (அக். 17) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்திருப்பதாவது: காரைக்குடி துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (அக். 17) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்புப்பகுதிகள், செக்கா லைக்கோட்டை, பாரிநகா், கல்லூரிச்சாலை, செக்காலைச்சாலை, புதிய பேருந்துநிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை, செஞ்சை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.