ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்/சிவகங்கை: ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கானோருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சுகாதாரப் பிரிவில் பணிபுரியும் 33 வயது ஆண் ஊழியா் மற்றும் பட்டினம்காத்தான் பகுதியில் சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் 32 வயது பெண் ஊழியா் உள்ளிட்ட 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரையில் 5,832 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,253 ஆக அதிகரித்துள்ளது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 34 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 2 போ் குணமடைந்ததையடுத்து, அவா்கள் சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 32 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com