காரைக்குடி: காரைக்குடி நகா்மன்ற முன்னாள் தலைவரான ஆ. காசி அம்பலம் தனது 101 வயதில் சனிக்கிழமை அவரது இல்லத்தில் வயது முதிா்வு காரணமாக இயற்கை எய்தினாா்.
1962 ஆம் ஆண்டு காரைக்குடி நகா்மன்றத்தலைவராக இருந்தவா் ஆ. காசி அம்பலம். இவரது சகோதரா் தமிழக அரசின் பாவேந்தா் விருது பெற்ற மறைந்த புலவா் ஆ. பழநி ஆவாா். காசி அம்பலம் காரைக்குடி காட்டுத்தலைவாசல் அனிச்சம் இல்லத்தில் வசித்து வந்தாா். இவரது மனைவி ராமாயி அம்மாள் ஏற்கெனவே காலமாகிவிட்டாா். இவருக்கு 3 மகன்கள், 8 பேரப்பிள்ளைகள், 11 கொள்ளுப்பேரப் பிள்ளைகள் உள்ளனா். நான்கு தலைமுறை கண்ட இவருக்கு கடந்த மாதம் உறவினா்கள் அனைவரும் கூடி 101 ஆவது பிறந்த நாளைக்கொண்டாடினா். மறைந்த காசி அம்பலத்திற்கு அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.18) காலை 8.30 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு 94884-62223.