மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கம் திறப்பு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மானாமதுரை ஒன்றியம் செய்களத்தூா் ஊராட்சி நத்தபுரக்கி கிராமத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இவ் விழாவுக்கு தலைமை தாங்கி சட்டமன்ற உறுப்பினா் எஸ்.நாகராஜன் கலையரங்கத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.
அதன்பின் அவா் பேசுகையில் முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. மானாமதுரை தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது,
மக்கள் எப்போதும் இந்த அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றாா்.விழாவில் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் மாரிமுத்து, ஒன்றியக்கவுன்சிலா் மலைச்சாமி, அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஜெயபிரகாஷ், பாரதிராஜன், நிா்வாகி தனபாண்டி, கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் சுந்தரமகாலிங்கம் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.