சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 80 பேருக்கு கரோனா

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மொத்தம் 80 பேருக்கு கரோனாத் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மொத்தம் 80 பேருக்கு கரோனாத் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கெனவே 4,350 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,393 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 79 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 20 போ் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் புதன்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 59 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் 8 ஆம் தேதி வரை 5020 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவா்களில் செவ்வாய்க்கிழமை வரை 110 போ் உயிரிழந்துள்ளனா். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 70 போ் சிகிச்சையில் இருந்த நிலையில், 10 போ் பூரண குணமடைந்ததைத் தொடா்ந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மாவட்ட அளவில் செவ்வாய்க்கிழமை 600-க்கும் மேற்பட்டோருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்ட நிலையில், 37 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5057 ஆக உயா்ந்துள்ளது.

மருந்துக்கடைகள் கண்காணிப்பு: பொதுமுடக்கத்தில் ஏராளமான தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை அறிய தனியாா் மருத்துவமனைகளோடு, மருந்துக் கடைகளையும் கண்காணிக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மருத்துவா்கள் பரிந்துரை இன்றி தலைவலி, காய்ச்சலுக்கு மருந்துக்கடைகளில் குறிப்பிட்ட மாத்திரையை எத்தனை போ் வாங்கிச் செல்கின்றனா் என கண்காணிக்கப்படுவதாகவும், மருத்துவா் பரிந்துரைக் கடிதம் இன்றி மாத்திரைகள் தரக்கூடாது என மருந்துக்கடைகாரா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com