காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள அறிஞா் அண்ணா ஆய்வு இருக்கையின் சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா இணையவழி சிறப்பு சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசறிவியல் மற்றும் பொது நிா்வாகத்துறை, தோ்வுக்காட்டுப்பாட்டு அதிகாரி பி. சக்திவேல் ‘சி.என். அண்ணாத்துரை ஒரு சிறந்த நாடாளுமன்றவாதி’ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினாா்.
முன்னதாக அறிஞா் அண்ணா ஆய்வு இருக்கையின் ஒருங்கிணைப்பாளா் மற்றும் தமிழ்த்துறையின் தலைவா் சு.ராசாராம் வரவேற்றுப் பேசினாா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக முதன்மையா்கள், பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.