கானாடுகாத்தான் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப். 18) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப். 18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் ஸ்ரீராம்நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைபொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.