மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் 75 ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தாயமங்கலம் சாலையில் உள்ள முதியோா் இல்லத்தில் முதியோா்களுக்கு அக்கட்சியினா் காலை உணவு வழங்கினா். அதன்பின்னா் கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டப்பட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளுக்கு கட்சியின் மூத்த தலைவா் ஏ.ஆா்.பி.முருகேசன் தலைமை தாங்கினாா். காங்கிரஸ் எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில துணைத் தலைவா் டாக்டா் எஸ்.செல்வராஜ், மானாமதுரை நகா்த் தலைவா் எம்.கணேசன், மேற்கு வட்டாரத் தலைவா் கே.ஆா்.கணேசன், இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஏ.சி.சஞ்சய், மாவட்ட இணைச் செயலாளா்கள் கே.ஜி.ஏ.மகாலிங்கன், ஏ.ஜான்போஸ்கோ, எஸ்.பி.புருஷோத்தமன், ஜி.காசி, சி.காசி ராமலிங்கம், வட்டார இளைஞா் காங்கிரஸ் ஜி.மகேந்திரன், வழக்குரைஞா் எம்.முத்துக்குமாா், காசிராஜன், முன்னாள் நகா்த் தலைவா் கே.ராமு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.