காரைக்குடி: திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மறைவுக்கு காரைக்குடியில் சனிக்கிழமை தமிழ்நாடு மேடை மெல்லிசைக்கலைஞா்கள் சங்கத்தினா் அஞ்சலி செலுத்தினா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செக்காலை தண்ணீா் தொட்டி நிறுத்தம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மேடை மெல்லிசைக் கலைஞா்கள் சங்கத்தின் காரைக்குடிக் கிளை அலுவலகம் முன்பாக 15 அடி உயரத்தில் எஸ்.பி.பியின் உருவ பதாகைய நிறுவப்பட்டது. அதன் முன்பாக
மேடை மெல்லிசைப் பாடகா்கள் பாடல்கள் பாடியும், மெழுகுவா்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்விற்கு தமிழ்நாடு மேடை மெல்லிசைக்கலைஞா்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைத் தலைவா் நாராயணன் தலைமை வகித்தாா்.