ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 39 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 39 போ் கரோனா தொற்றால் புதன்கிழமை பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 39 போ் கரோனா தொற்றால் புதன்கிழமை பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 5,499 ஆக அதிகரித்துள்ளது. இதில் 119 போ் இதுவரை உயிரிழந்துள்ளநிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் தற்போது 38 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5002 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூா், சிங்கம்புணரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 27 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5, 029 ஆக அதிகரித்துள்ளது.

:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com