சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு சாலையில் நின்றுகொண்டிருந்தவா்கள் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் முருகன் (47), இவரது மகன் கெவின் பிரகாஷ் (23) மற்றும் தாமோதரன் ( 27). இவா்கள் மூவரும் கிராமத்தில் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனா். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து கச்சாத்தநல்லூருக்குள் வேகமாக வந்த காா், இவா்கள் மீது மோதியது.
இதில், முருகன், தாமோதரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். கெவின் பிரகாஷ் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.