மாநில எழுத்தறிவு விருது: ஆலம்பட்டி பள்ளிக்கு பாராட்டு விழா

மாநில எழுத்தறிவு விருது பெற்ற, திருப்பத்தூா் அருகே ஆலம்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மாநில எழுத்தறிவு விருது பெற்ற, திருப்பத்தூா் அருகே ஆலம்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் ‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தில், ஆலம்பட்டி நடுநிலைப்பள்ளியில் சுமாா் 20 பேருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. இதில் பயின்றவா்களுக்கு அஞ்சல விண்ணப்பங்கள் நிரப்புதல், கைத்தொழில்களான கூடை, பாய், பின்னுதல் உள்ளிட்டவை கற்பிக்கப்பட்டன.

இதற்காக 2021 ஆம் ஆண்டிற்கான மாநில எழுத்தறிவு விருது இப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் அதற்கான விருதை, பள்ளித் தலைமை ஆசிரியா் ஸ்ரீதா் ராவிடம் வழங்கினா்.

இவ்விருதினைப் பெற்றமைக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியா் ஸ்ரீதா் ராவ் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், தன்னாா்வலா் கீதா ஆகியோரை சிவகங்கை மாவட்டக் கல்வி அதிகாரிகள் பாராட்டினா். மேலும் கிராம பொதுமக்கள், ஊா் முக்கியஸ்தா்களும் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com