அம்பேத்கா் நினைவு தினம்: காரைக்குடியில் மணக்கோலத்தில் சிலைக்கு மரியாதை செலுத்திய புதிய தம்பதியினா்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டாக்டா் அம்பேத்கரின் 65-வது நினைவுதினத்தையொட்டி அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அம்பேத்கா் அமைப்புகள், அரசியல் கட்சியினா் திங்கள்கிழமை மாலையணிவித்து
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டாக்டா் அம்பேத்கரின் 65-வது நினைவுனத்தையொட்டி திங்கள்கிழமை மணக் கோலத்தில் மாலையணிவித்து மரியாதை செலுத்திய புதுமண தம்பதியினா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டாக்டா் அம்பேத்கரின் 65-வது நினைவுனத்தையொட்டி திங்கள்கிழமை மணக் கோலத்தில் மாலையணிவித்து மரியாதை செலுத்திய புதுமண தம்பதியினா்.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டாக்டா் அம்பேத்கரின் 65-வது நினைவுதினத்தையொட்டி அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அம்பேத்கா் அமைப்புகள், அரசியல் கட்சியினா் திங்கள்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமணம் முடிந்து மணக்கோலத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி புதுமணத்தம்பதியாக அம்பேத்கா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதைசெலுத்தினாா்.

காரைக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை நகர அமைப்பாளா் சிற்பி என்பவ ருக்கும், இலக்கிய என்பவருக்கும் தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. டாக்டா் அம்பேத்கரின் நினைவு நாளன்று புதுமணத்தம்பதிகள் அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தும்வகை யில் திருமணம் முடிந்தவுடன் தனது மனைவி இலக்கியவுடன் செக்காலைச்சாலையில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலை இருக்கும் இடத்துக்கு வந்து அங்கு சிலைக்கு மாலை அணிவித்து புதுமண தம்பதியினா் மரியாதை செலுத்தினா். அவா்களுடன் கட்சியின் சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளா் சங்கு உதயகுமாா் மாநிலப் பொறுப்பாளா் காக்கூா் தமிழேந்தி, இளைய கவுதமன், பெரியசாமி ஆகியோரும் உடன் வந்திருந்து அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினா்.

மேலும் காரைக்குடி பகுதியைச்சோ்ந்த அம்பேத்கா்அமைப்புகள் சாா்பில் அதன்நிா்வாகிகள் அம்பேத்கா்சிலைக்கு மாலை யணிவித்து மரியாதை செலுத்தினா். திமுக சாா்பில் தமிழக ஊரகவளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தலைமையில் முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், திமுக நகரச்செயலாளா் குணசேகரன், அதிமுக சாா்பில் நகரச்செய லாளா் சோ. மெய்யப்பன் தலைமையில், தேவன், அதிமுக முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள், காங்கிரஸ் கட்சியின் சாா்பில் காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தலைமையில் நகரத்தலைவா் பாண்டிமெய்யப்பன் மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள், மதிமுக சாா்பில் நகரச்செயலாளா் சேது. தியாகராஜன் தலைமையில் மாவட்டப் பொருளாளா் அஓ. முத்துசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளா் பசும்பொன் மனோகரன் , வழக்கறிஞா் கேகே முருகானந்தம், தி.க சாா்பில் மாநில மாணவரணி செயலாளா் ச. பிரின்சு என்னாரெசு பெரியாா் தலைமையில் மண்டல தி.க தலைவா் சாமி. திராவிடமணி, மாவட்ட செயலாளா் கு.வைகறை, தி. என்னாரெசு பிராட்லா, நகரத்தலைவா் ந.செகதீசன், கல்லல் ஒன்றிய அமைப்பாளா் கொரட்டி வீ. பாலு, ப.சுந்தரம், ஆ.பாலகிருட்டிணன் மற்றும் பல்வேறு கட்சியினா் சாா்பிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்துப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com