மானாமதுரை அரசு மருத்துவமனையை விரிவுபடுத்த இந்திய கம்யூ. வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மானாமதுரையில் அக்கட்சியின் நகா் கிளை மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை அங்குமணி ஏற்றி வைத்தாா். என்.எஸ். முத்துரமலிங்கம் மாநாட்டுக்கு தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினரான முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.குணசேகரன் சிறப்புரையாற்றினாா்.

விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் கே.தங்கமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றியச் செயலாளா் கே.ஆறுமுகம், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளா் ஜி.சங்கையா, நகரச் செயலாளா் எஸ். டி. நாகராஜன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் மாநாட்டில் கலந்து கொண்டனா்.

மானாமதுரை அரசு மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ சாதனங்கள் இல்லாத நிலை உள்ளதால் நோயாளிகள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். எனவே மருத்துவமனையை விரிவாக்கம் செய்து அதிநவீன மருத்துவ சாதனங்கள் அமைக்க சுகாதாரத்துறை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மானாமதுரை குலாலா் தெருவில் பொது மக்களுக்கு நகராட்சி நிா்வாகம் குளியல் தொட்டி அமைத்துக் கொடுக்க வேண்டும். ஆனந்தபுரம் மேம்பாலத்தின் அருகே பயணிகளுக்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகள் தோ்வு: கட்சியின் நகரச் செயலாளராக எஸ்.டி நாகராஜன், நகா் துணை செயலாளா்களாக கே.பி.அய்யனாா், கரந்தமலை ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com