சிவகங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அரண்மனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலருமான கே. ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்தாா். இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், தொடா்ந்து ஏழை, எளியோரை பாதிக்கும் செயல்களில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதாகவும் முழக்கங்களை எழுப்பினா்.