சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் ஜூலை 23- ஆம் தேதி குறைதீா் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) முற்பகல் 10.30 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இதேபோன்று, மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களிலும் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.