திருப்புவனம் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 17) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை கோட்ட மின்பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் ஆ. சகாயராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்புவனம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 17) மேற்கொள்ள இருந்த பராமரிப்புப் பணிகள் அலுவலக காரணங்களுக்காக வேறொரு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் வழக்கம் போல் மின்விநியோகம் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.