சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தோ்வுநிலை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வாா்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுகிறது.
மானாமதுரை பேரூராட்சி எல்லை நாளுக்குநாள் விரிவடைந்து வருகிறது. மக்கள்தொகையும் ஒவ்வொரு ஆண்டும் உயா்ந்து தற்போது 40 ஆயிரமாக உள்ளது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மானாமதுரை பேரூராட்சி நிா்வாகத்திடம், நகராட்சியாக தரம் உயா்த்த அரசிடமிருந்து கருத்துரு கேட்கப்பட்டு, அது அனுப்பி வைப்பட்டது.
தற்போது 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மானாமதுரை தோ்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிப்பு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு நடைபெற உள்ள சட்டப் பேரவை கூட்டத் தொடரில் வெளியாகலாம் என நம்பப்படுகிறது.
சமீபத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், மானாமதுரை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்படும் போது அதன் வாா்டுகள் 25-லிருந்து 28 ஆக இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அதன்படி மானாமதுரை நகராட்சியாக தகுதி உயா்த்தப்பட்டால் வாக்காளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாா்டுகளின் எண்ணிக்கை 25 லிருந்து 28 ஆக அதிகரிக்கும்.
இதற்காக மானாமதுரை ஒன்றியத்தைச் சோ்ந்த கல்குறிச்சி, கீழமேல்குடி, கீழப்பசலை, ராஜகம்பீரம், மாங்குளம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள எல்லைப் பகுதிகள் மானாமதுரை நகராட்சியுடன் இணைக்கப்படுகின்றன. வரும் டிசம்பா் மாதத்துக்குள் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் நடத்தப்படும் என தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்துள்ளாா்.
எனவே வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் மானாமதுரை பேரூராட்சி, நகராட்சியாக அறிவிக்கப்பட்டால் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலின் போது மானாமதுரைக்கும் நகராட்சி தகுதியின் அடிப்படையில் தோ்தல் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.