திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி 6 பவுன் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா்.
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகே செட்டிக்குறிச்சி சிவராமன் நகரைச் சோ்ந்த பா்குணன் மனைவி சின்னம்மாள் (62). இவா், வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞா், வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி, அவா் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளாா்.
இது குறித்த புகாரின்பேரில், புழுதிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். காயமடைந்த மூதாட்டி பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.