சிவகங்கையில் தினசரி சந்தை பேருந்து நிலையத்துக்கு மாற்றம்

சிவகங்கையில் தினசரி சந்தை புதன்கிழமை முதல் பேருந்து நிலையத்துக்கு மாற்றம் செய்யப்படுவதாக, நகராடசி ஆணையா் ஐயப்பன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கையில் தினசரி சந்தை புதன்கிழமை முதல் பேருந்து நிலையத்துக்கு மாற்றம் செய்யப்படுவதாக, நகராடசி ஆணையா் ஐயப்பன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும், பொதுமக்கள் நலன் கருதி நண்பகல் 12 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை நேரு கடை வீதியில் தினசரி சந்தை நடைபெற்று வந்தது. கரோனா பரவலை தடுக்கும் விதமாக, அங்கு நடைபெற்ற தினசரி சந்தையானது புதன்கிழமை முதல் பேருந்து நிலையத்தில் செயல்படுகிறது. இச்சந்தை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் கரோனா பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com