வெளிமாநிலத் தொழிலாளா்கள் உதவி பெற செல்லிடப்பேசி எண்: ஆட்சியா் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற செல்லிடப்பேசி எண்ணில் அழைக்கலாம் என, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற செல்லிடப்பேசி எண்ணில் அழைக்கலாம் என, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய் பரவல் காரணமாக, சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்களுக்கு தேவைப்படும் உதவிகளை பெற, தனி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

எனவே, வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து 94424-18361, 95669-55059, 73970-20057 என்ற செல்லிடப்பேசி எண்களில் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com