மானாமதுரையில் மூதாட்டியிடம் நகை பறித்த இருவா் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மூதாட்டியிடம் சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில் போலீஸாா் இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மூதாட்டியிடம் சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில் போலீஸாா் இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை ரயில்வே காலனி ஜீவா நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மனைவி தனபாக்கியம் (65). இவா் கடந்த 14 ஆம் தேதி வீட்டு வாசலில் அதிகாலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்தபோது இரு மா்ம நபா்கள் 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.

இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் மதுரை நாராயணபுரம் துரைப்பாண்டி மகன் விஜய் என்ற சுப்பு (20), நாகூா் மகன் சுல்தான்(22) ஆகிய இருவரும் சங்கிலியைப் பறித்துச்சென்றது தெரியவந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com