ஐ.டி. பிரிவுகீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற 1008 சங்காபிஷேகம்.
ஐ.டி. பிரிவுகீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 1008 சங்காபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் காா்த்திகை 2 ஆவது சோமவாரத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு மூலவா் மற்றும் 40 பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அா்ச்சனைகள் நடைபெற்றன.

பின்னா் மாலை 5 மணிக்கு கோயில் மைய மண்டபத்தில் 1008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னா் கோயில் உள்பிரகாரத்தில் கலச ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் அம்மனுடன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்தாா். இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com