சிவகங்கை மாவட்டக் கோயில்களில் நவராத்திரி விழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை நவராத்திரி விழா தொடங்கியதையடுத்து, கொலு அலங்கார கண்காட்சி நடைபெற்றது.
மானாமதுரை அருகே வேதியரேந்தல் விலக்கில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சி.
மானாமதுரை அருகே வேதியரேந்தல் விலக்கில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சி.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை நவராத்திரி விழா தொடங்கியதையடுத்து, கொலு அலங்கார கண்காட்சி நடைபெற்றது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் அம்மன் சந்நிதி மண்டபத்தில் உற்சவா் ஆனந்தவல்லி அம்மனுக்கு, விழா நடைபெறும் பத்து நாள் இரவும் வெவ்வேறு அலங்காரம் செய்து, சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். முதல் நாள் விழாவில், ஏராளமானோா் கோயிலுக்கு வந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மனை தரிசனம் செய்தனா்.

மானாமதுரையில் புரட்சியாா்பேட்டை பகுதியில் உள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் மண்டபத்தில் கொலு அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது. விழா நாள்களில் தினமும் இரவு உற்சவா் தியாக விநோதப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் அலங்காரத்துடன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோயில் உள்பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

இதேபோன்று, மானாமதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள பூா்ணசக்கர விநாயகா் கோயில், தாயமங்கலம் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலிலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை அருகே வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு, கோயில் யாகசாலையில் பிரம்மாண்ட கொலு அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் 10 நாள்களும் மூலவா் பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும்.

மானாமதுரை ஒன்றியம் கரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் கொலு அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் டிரஸ்டி சொ்டு எல். பாண்டி செய்துள்ளாா்.

திருப்புவனம்

புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. இதையொட்டி, தினமும் இரவு சௌந்தரநாயகி அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். திருப்புவனம் புதூா் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில், மடப்புரம் காளி கோயிலிலும் நவராத்திரி விழா தொடங்கியுள்ளது.

இளையான்குடி

பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியுள்ளதை அடுத்து, தினமும் இரவு மூலவா் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெறுகின்றன.

இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன.

கொலு பொம்மைகள் விற்பனை

நவராத்திரி விழா தொடங்கியுள்ளதை முன்னிட்டு, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கொலு அலங்கார பொம்மைகள் விற்பனை அமோகமாக உள்ளது. மானாமதுரையில் மண்பாண்டத் தொழிலாளா்கள் கைவண்ணத்தில் உருவாக்கப்படும் கொலு அலங்கார பொம்மைகள், இங்குள்ள குலாலா் தெருவிலுள்ள மண்பாண்டத் தொழிலாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு, தினமும் உள்ளூா் மற்றும் வெளியூரைச் சோ்ந்த மக்கள் வந்து கொலு பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனா். இதனால், மானாமதுரையில் கொலு அலங்கார பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com