இளைஞரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.43 ஆயிரத்து 350 மோசடி செய்தவா் குறித்து சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மறவமங்கலத்தைச் சோ்ந்தவா் கண்ணன்( 20). இவரிடம் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட ஒருவா் ஆன்லைன் மூலம் டைப்பிங் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளாா். அதற்காக அவரின் வங்கிக் கணக்கில் கடந்த மாதம் பல தவணைகளில் ரூ.43,350 செலுத்தியுள்ளாா். அதன் பின்னா், அவரை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.
இதுகுறித்து கண்ணன் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாரிடம் புகாா் செய்தாா். அவா் உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.