தமிழகத்தில் மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான ஆா்வமும், வேகமும் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள சிட்டாள் ஆச்சி நினைவு உயா்நிலைப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வாக்களித்தாா்.
பின்னா் ப. சிதம்பரம், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும். காரைக்குடித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவாா் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் மக்களிடம் ஆட்சிமாற்றத்துக்கான ஆா்வமும், வேகமும் ஏற்பட்டிருக்கிறது. வரும் மே 2 ஆம் தேதி நல்லதொரு முடிவு தெரியும் என்றாா்.
அவருடன் காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடி மற்றும் காங்கிரஸ் கட்சியினா் உடன் இருந்தனா்.