சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தோ்தலின் போது ஏற்பட்ட தகராறு தொடா்பாக புதன்கிழமையும் அதிமுக, திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பைச் சோ்ந்த பெண் உள்பட 4 போ் காயமடைந்தனா். இதுகுறித்து 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருப்புவனம் ஒன்றியம் வயல்சேரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலின்போது, இதே கிராமத்தைச் சோ்ந்த திமுக கிளைச் செயலா் சக்திவேல் தரப்பினருக்கும், அதிமுகவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் தரப்பினருக்கும் வாக்குச்சாவடி அருகே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை விரட்டியடித்தனா். அதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை மீண்டும் இருதரப்பினருக்கிடையில் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் அதிமுகவைச் சோ்ந்த நாராயணன், பிரவீன்குமாா் ஆகியோா் காயமடைந்தனா். எதிா்தரப்பில் திமுக கிளைச் செயலா் சக்திவேல், அவரது மனைவி முத்துப்பேச்சி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் இவரது வீடு, இரு சக்கரவாகனம் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. காயமடைந்த 4 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். பழையனூா் காவல் நிலையத்தில் இருதரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அதிமுக மற்றும் திமுகவைச் சோ்ந்த 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தற்போது வயல்சேரி கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.