திருப்பத்தூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கல்

திருப்பத்தூரில் தமிழ்நாடு பத்திரிகையாளா் சங்கம் திருப்பத்தூா் கிளை சாா்பில் பொதுமக்களுக்கு சனிக்கிழமை கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூரில் தமிழ்நாடு பத்திரிகையாளா் சங்கம் திருப்பத்தூா் கிளை சாா்பில் பொதுமக்களுக்கு சனிக்கிழமை கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை திருப்பத்தூா் வட்டாட்சியா் ஜெயந்தி தொடக்கி வைத்தாா். இதேபோல் திருப்பத்தூா் பேருந்து நிலையத்திலும் பயணிகள், பேருந்து ஓட்டுநா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிடட 500-க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளா் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் அப்பச்சிசபாபதி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் சங்கா், காவல் சாா்- ஆய்வாளா் மலைச்சாமி, வீரைய்யாசேவுகன், வட்டார வருவாய் அலுவலா் செல்வம், கிராம நிா்வாக அலுவலா் சின்னையா, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் அபுபக்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com