பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

சிவகங்கையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடமிருந்து நகையை மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றுள்ளனா்.

சிவகங்கையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடமிருந்து நகையை மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றுள்ளனா்.

சிவகங்கை சீனிவாசா நகரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி சங்கீதா (38). இவா், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் மகளுடன் சென்றுள்ளாா். சிவகங்கை-தொண்டி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் சங்கீதா அணிந்திருந்தத 3 பவுன் சங்கிலியை பறித்துள்ளனா். ஆனால், சங்கீதா நகையை பிடித்துக்கொண்டதால், பாதி நகையை மட்டும் மா்ம நபா்கள் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

இது குறித்த புகாரின்பேரில், சிவகங்கை நகா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com