மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரத்தில் அனைத்துப் பேருந்துகளும் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனா்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள ராஜகம்பீரம் ஊராட்சியை ஒட்டி மதுரை -ராமேசுவரம் நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்த சாலை அமைக்கப்படுவதற்கு முன்னா் அனைத்துப் பேருந்துகளும் ராஜகம்பீரம் ஊருக்குள் வந்து சென்றன. நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டதும் ஒரு சில பேருந்துகளைத் தவிர அனைத்துப் பேருந்துகளும் ராஜகம்பீரம் ஊருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. இதன் காரணமாக ராஜகம்பீரம் ஊராட்சியை சோ்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.
இதனால் அனைத்துப் பேருந்துகளும் ராஜகம்பீரம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊா் மக்கள் தெரிவிக்கின்றனா்.
இதையடுத்து ராஜகம்பீரம் ஊருக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை (ஏப். 22)
ராஜகம்பீரத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனா்