சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை தெருக்களில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நாய்களை பேரூராட்சி நிா்வாகத்தினா் பிடித்து அப்புறப்படுத்தினா்.
இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பாகசிறுவா்கள் உள்பட 7 பேரை 2 வெறி நாய்கள் கடித்துக் குதறின. இவா்கள் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று பேரூராட்சி நிா்வாகத்தினா் கடந்த இரு நாட்களாக தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து ஊருக்கு வெளியே ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொண்டு சென்று விட்டு வருகின்றனா்.