விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சி

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

காளையாா்கோவிலில் நடைபெற்ற இப்பயிற்சியில் காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள் ரா. சுா்ஜித், மா.அ. அஜித்குமாா், மி.ஜெரோம் மில்டன், சி. தினேஸ்வரன், மு. பவுன்குமாா், த. பிரியதா்சன் ஆகியோா் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து செயல்முறை பயிற்சியுடன் விளக்கினா்.

இதில், காளையாா்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com