தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க அனுமதியளித்த மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்குடி ஐந்துவிளக்குப்பகுதியில் தமிழக மக்கள் மன்றத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் மன்றத் தலைவா் ச.மீ. ராசகுமாா் தலைமை வகித்துப் பேசும் போது, ஆக்சிஜன் தேவைக்கு பல மாற்று நிறுவனங்கள் இருக்கும் பட்சத்தில் ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு என்பது ஒரு நாடகமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்றாா்.
அதைத்தொடா்ந்து ஸ்டொ்லைட் ஆலை திறப்பதைக்கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழக மக்கள் மன்றச் செயலா் கேஆா். ஆறுமுகம், தமிழ் காா்த்திக் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.