குளத்தில் மூழ்கி சிறுமி பலி

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே புதன்கிழமை மாலை குளத்தில் மூழ்கி சிறுமி ஒருவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே புதன்கிழமை மாலை குளத்தில் மூழ்கி சிறுமி ஒருவா் உயிரிழந்தாா்.

தனிவீரனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த சதீஸ் மகள் ஜனனி (5). இவா், தனது சகோதரியுடன் அதே பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீா் எடுப்பதற்காக புதன்கிழமை மாலை சென்றுள்ளாா். அப்போது தடுமாறி குளத்துக்குள் விழுந்த சிறுமி ஆழத்துக்குள் சென்று விட்டாராம். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் குளத்துக்குள் இறங்கி தேடியபோது உயிரிழந்த நிலையில் ஜனனி மீட்கப்பட்டாா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த போலீஸாா் உயிரிழந்த ஜனனி உடலைக் கைப்பற்றி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com