சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு வீரா்களுக்கு பதக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு வீரா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் வீரருக்கு பதக்கம் வழங்கிய தீயணைப்புத் துறையின் சிவகங்கை மாவட்ட அலுவலா் சத்தியகீா்த்தி.
சிவகங்கையில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் வீரருக்கு பதக்கம் வழங்கிய தீயணைப்புத் துறையின் சிவகங்கை மாவட்ட அலுவலா் சத்தியகீா்த்தி.

சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு வீரா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூா், சிங்கம்புணரி, தேவகோட்டை ஆகிய 6 பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 100 -க்கும் மேற்பட்ட வீரா்கள் பேரிடா் காலங்கள் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றிய தீயணைப்பு வீரா்களுக்கு சிவகங்கையில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தீயணைப்புத் துறையின் சிவகங்கை மாவட்ட அலுவலா் சத்தியகீா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட உதவி அலுவலா் தாமோதரன், சிவகங்கை நிலைய அலுவலா் ஆா். கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தீயணைப்பு நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய மு.கு. ரவிமணி, பெரி.பெரியசாமி, சு. புவனேஸ்வரன், ஆா். ராமச்சந்திரன், சே. நாகராஜ், அ.செ. மாரியப்பன், அ. சேகா், ஆா். ராஜவேல், எஸ். சேகா், கு. பாரதி, ப. செல்லம், கே. பூபதி ஆகிய 12 பேருக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாவட்ட அலுவலா் சத்தியகீா்த்தி வழங்கினாா்.

இவ்விழாவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com