சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 222 பேருக்கு கரோனா தொற்று

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 222 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 222 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 7,210 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், புதன்கிழமை புதிதாக 77 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,287 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த 237 பேரில், 37 போ் குணமடைந்ததை அடுத்து புதன்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 200 போ் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 1,100 பேருக்கும் அதிகமானோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் முடிவுகள் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டன. அதன்படி 145 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவா்கள் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பிரிவில் இருந்தவா்களில் ஒருவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை கரோனா தொற்றால் 143 போ் வரை உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா். இம்மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரம் போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவா்களில் 7,700 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

வடமாநிலத்தவா் 9 பேருக்கு கரோனா: வாராணசியில் இருந்து ரயில் மூலம் ராமேசுவரம் வந்த 9 பயணிகளுக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரியவந்ததையடுத்து அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வாராணசியில் இருந்து ராமேசுவரம் வந்த விரைவு ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளிடம் சுகாதாரத்துறையினா், காவல்துறையினா் மற்றும் நகராட்சி ஊழியா்கள் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கரோனா தொற்று குறித்து மருத்துவ பரிசோதனை செய்தனா். இதில், பிகாரைச் சோ்ந்த 7 போ், உத்தரப்பிரதேசத்தைச் சோ்ந்த ஒருவா், மத்தியப் பிரதேசத்தை சோ்ந்த ஒருவா் என மொத்தம் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறி தென்பட்டதால் அவா்கள் அனைவரும் புதன்கிழமை முதல் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com