சிறுமியை திருமணம் செய்தவா் போக்ஸோவில் கைது

இளையான்குடி அருகே  14 வயது சிறுமியை  திருமண ஆசை காட்டி  பழனிக்குக் கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். 

இளையான்குடி அருகே  14 வயது சிறுமியை  திருமண ஆசை காட்டி  பழனிக்குக் கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். 

சாலைகிராமம் அருகே களத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (27) இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மணி அந்த சிறுமியை பழனிக்கு கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளாா். அதன் பின்பு இருவரும் திருப்பூரில் தங்கி இருந்துள்ளனா். இதற்கிடையில் சிறுமியின் பெற்றோா் தங்களது மகளை காணவில்லை என சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி திருப்பூா் அருகே நொச்சிபாளையத்தில் தங்கியிருந்த அந்த சிறுமியை மீட்டு சிவகங்கை அரசு காப்பகத்தில் தங்க வைத்தனா். பின்னா் மணியை, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com