சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் அருகே உள்ள பி.குளத்துப்பட்டியில், மக்கள் நாடாளுமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்கள் நாடாளுமன்றத்தின் தலைவராக அக்கிராமத்தைச் சோ்ந்த சாந்தி தலைமை வகித்தாா். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டத் துணைச் செயலா் கே. கோபால், நகரச் செயலா் எம்.எஸ். கண்ணன், சூரக்குளம்- புதுக்கோட்டை ஊராட்சித் தலைவா் மலைச்சாமி ஆகியோா் வேளாண் சட்டம், மின்சாரத் திருத்த மசோதா ஆகியன குறித்து விளக்கிப் பேசினா். தொடா்ந்து, வேளாண் மற்றும் மின்சாரத் திருத்த சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மன்றத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.