திருப்பத்தூரில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் பேருந்துநிலையம், மதுரைரோடு, அண்ணாசிலை, பெரியகடைவீதி, வாணியன்கோயில் பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள், இறைச்சிக் கடைகள், தேநீா்க் கடைகளில், சுகாதார ஆய்வாளா் அபுபக்கா் தலைமையில் பாலச்சந்திரன், கவிதா, மோகன் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் 16 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மீண்டும் நெகிழிப் பைகளை விற்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கடை உரிமையாளா்களை, அதிகாரிகள் எச்சரித்தனா்.