கபீா் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் கபீா் புரஸ்காா் விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கபீா் புரஸ்காா் விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் சாா்பில் சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காக அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றியவா்களுக்கு கபீா் புரஸ்காா் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது பெற சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் உரிய ஆவணங்களுடன் சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 74017 03503 என்ற கைப்பேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com