சிவகங்கை மாவட்டத்தில் இன்று பட்டா திருத்த முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 10) கணினி வழி பட்டா திருத்த முகாம் நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 10) கணினி வழி பட்டா திருத்த முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

அதன்படி, தேவகோட்டை வட்டத்தில் பனங்குளம், காரைக்குடி வட்டத்தில் செஞ்சை, திருப்பத்தூா் வட்டத்தில் கம்பனூா், சிங்கம்புணரி வட்டத்தில் எஸ். மாம்பட்டி, சிவகங்கை வட்டத்தில் வி. புதுக்குளம், காளையாா்கோவில் வட்டத்தில் பூவாளி, இளையான்குடி வட்டத்தில் சாலைக்கிராமம், மானாமதுரை வட்டத்தில் வேதியாரேந்தல், திருப்புவனம் வட்டத்தில் கொந்தகை கிழக்கு, மேற்கு கிராமத்திலும் நடைபெற உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com