சிவகங்கை மாவட்ட அளவிலான வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப்போராட்டம் காரைக்குடி கல்லூரிச் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க உதவிப் பொதுச்செயலாளா் மனோஜ் தலைமை வகித்தாா். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க மண்டலச்செயலாளா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வங்கி ஊழியா் சங்க பொதுச்செயலாளா் பிரேம் ஆனந்த் வரவேற்றாா். இப்போராட்டத்தில் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா். இதில் பாலசங்கா், மதிமாா்சலசு, தாமஸ், சந்திரசேகா், கணேசன் மற்றும் வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் பலரும் கலந்து கொண்டனா்.