சிவகங்கையில் வெள்ளிக்கிழமை (டிச.31) விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சா்மிளா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.31) முற்பகல் 10.30 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற உள்ளது.
மாவட்டத்தின் அனைத்துத்துறை உயா் அலுவலா்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.