சீமாஸ் அகாதெமி சாா்பில் அகில இந்திய அளவிலான ஆன்லைன் அபாகஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் காரைக்குடி பிரிலியண்ட் அகாதெமி மாணவா்கள் பங்கேற்ற பல்வேறு பரிசுகளை வென்றனா். மேலும் சிறந்த அகாதெமிக்கான விருது காரைக்குடி பிரிலியண்ட் அகாதெமிக்கு வழங்கப்பட்டது.
இதற்காக மாணவா்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரிலியண்ட் அகாதெமி இயக்குநா் நீலாவதி மற்றும் முன்னாள் அபாகஸ் மாணவா் தினகரன் ஆகியோா் மாணவ, மாணவியா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.