வருவாய்த் துறை அலுவலா்கள் 6-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை 6-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை 6-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17 ஆம் தேதி முதல் அச்சங்கத்தினா் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். சிவகங்கை மாவட்டத்தில் 9 வட்டாட்சியா் அலுவலகங்கள், 2 கோட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 184 அலுவலா்கள் தொடா்ந்து, 6 -ஆவது நாளாக திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன்காரணமாக, பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி வட்டாட்சியா் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com